திருவள்ளூர், ஜன 22- ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள மகளிர் சுயமாக வாழ, அவர் களின் மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக் குழுக் களை ஆரம்பித்து, அவற்றிற்கு தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் நிதியும் வழங்கி வருகிறது. இதில் பழங்குடியினர் மகளிர் சுய உதவி குழுவிற்கும் சேர்த்து தான் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குகிறது. பழங்குடியினர் மகளிர் குழு துவங்கி ஆறு மாதம் முடிந்த நிலையில், சமுதாய முதலீட்டு நிதி என்ற வகை யில் ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.1.5 லட்சமும் சுழல் நிதி என ரூ.60 ஆயிரமும் வழங்கி யிருக்க வேண்டும். இதன் மூலம் பழங்குடி மக்கள் ஆடு, மாடு போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு, தங்கள் தொழிலை பெருக் கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிதயுதவி வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 2022 -23 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கான தேவை யான நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மாவட்டத்தில் கும்மிடிப் பூண்டி, சோழவரம், கடம்பத்தூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் 2022 ஆம் ஆண்டே பழங்குடியினர் 38 மகளிர் சுய உதவிக் குழுக் களை துவக்கினர். ஆனால் 2ஆண்டுகள் கடந்தும் இது வரை எந்த நிதியும் அரசி டமிருந்து கிடைக்கவில்லை என்று பெண்கள் தெரிவித் தனர். கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள எருக்குவாய் ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் செஞ்சியம்மாள் சுய உதவிக் குழு, அங்கம்மாள் சுய உதவி குழு, குறிஞ்சி சுய உதவி குழு என துவக்கி உள்ளனர்.இவர்களுக்கும் நிதியுதவி கிடைக்கவில்லை. இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்டச் செயலா ளர் ஆர்.தமிழ்அரசு கூறுகை யில், பழங்குடி இன மக்கள் அனைத்து வகையிலும் பின்தங்கியுள்ளனர். இவர்களின் முன்னேற்றத் திற்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குகிறது. மற்ற சமூகத்தை சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழங்குடியினர் துவக்கியுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் நிதி வழங்கப்பட வில்லை. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே செல்கிறது என்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட இயக்கு நரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு நிதி உரிய வகையில் சென்று சேர அரசும், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.