சென்னை, அக். 28 - எழில்நகர் மேம்பாலப் பணி தொடங்குவதற்கு முன்பாக கொடுங்கையூர் இணைப்பு கால்வாயின் கரைகளின் உயரத்தை அதிகரித்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 41வது வார்டு உறுப்பினர் விமலா வலியுறுத்தினார். மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய உறுப்பினர் விமலா, எழில் நகர் மேம்பாலப்பணி எப் போது தொடங்கும்? என்று கேட்டார். அதற்கு பதில ளித்த மேயர் ஆர்.பிரியா, ஒப்பந்தப்புள்ளிகள் நேர் செய்து, பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். இதனையடுத்து துணை க்கேள்வி எழுப்பிய விமலா, எழில்நகர், எம்ஜிஆர் நகர், அன்னை சத்யா நகர்களில் அடிக்கடி தீ விபத்து நிகழ்கிறது. மேம்பாலப் பணிகள் தொடங்கினால் அந்தப் பகுதிகளுக்கு தீய ணைப்பு வாகனம், ஆம்பு லன்ஸ் சென்று வர இயலாது. எனவே, கொடுங்கையூர் இணைப்பு கால்வாய் கரை களின் உயரத்தை அதி கரித்து, சாலையை செப்ப னிட வேண்டும். அதன் பிறகு மேம்பால பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று வினவினார். அதற்கு பதிலளித்த மேயர், உறுப்பினர் குறிப் பிட்டபடி பணிகளை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
‘இங்கிலீசில் தான் பேசுவேன்’ பாஜக கவுன்சிலர் அடாவடி
மாநகராட்சி மன்ற கூட்டம் நேரமில்லா நேரத்தில் பேசிய பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தமிழில் பேச கூறினர். “நான் அப்படித்தான் பேசுவேன். இங்கிலீசில் தான் பேசு வேன்” என அடாவடியாக பேசினார். இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் தமிழ் வாழ்க என முழக்கமிட்டனர். அதன் பின்னர், தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து அவர் பேசினார். இந்நிகழ்விற்கு முந்தைய நாள்தான் இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் திமுக தமிழை அழிக்கிறது என பாஜகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது.