ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்களன்று (மார்ச்13) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் தலா ரூ.10,500 வீதம் 21,000 மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலி வழங்கவேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஆட்சியர் ச.வளர்மதி நிறைவேற்றினார்.