districts

img

புதிய கவுன்சிலர்களை வரவேற்க தயாராகிறது மாமன்ற கூட்ட அரங்கு

சென்னை. பிப்.2 சென்னை மாநகராட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள கவுன்சிலர்களை வரவேற்க மாமன்ற  கூட்ட அரங்கு தயாராகி வருகிறது, தமிழகத்தில் உள்ள 15 மாநக ராட்சி உட்பட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற  உள்ளது. இந்த நிலையில் தமிழ கத்தில் உள்ள மாநகராட்சிகளில் அதிக வார்டுகள் கொண்ட மாநகராட் சியாக 200 வார்டுகள் கொண்ட பெரு நகர சென்னை மாநகராட்சி இருந்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையகமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரிப்பன் மாளிகை செயல்பட்டு வருகிறது. சென்னையில் அடையாளமாக திகழும் ரிப்பன் மாளிகை கடந்த 1909-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த  பிரசித்தி பெற்ற மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள கவுன்சிலர்களின் மன்றக்கூட்டம் 2-வது தளத்தில் உள்ள மன்றக் கூட்டரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்த மன்ற கூட்டரங்கில் கடந்த  2015-ம் ஆண்டு ரிப்பன் மாளிகையில் அன்றைய மேயர் சைதை துரைசாமி தலைமையில் மன்றக்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து 6 ஆண்டுகளாக பெரு நகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது.

இதனால் இந்த மன்றக் கூட்டரங்கம் கடந்த 6 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையின் 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளதை யொட்டி, இந்த மன்றக் கூட்டரங்கை சுத்தம் செய்யும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டரங்கின் பழமை  மாறாமல் அங்குள்ள இருக்கை களை சரி செய்தும், தேவையான இடங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் நடந்து வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி உயர்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக் கான முடிவுகள் வெளியிடப்பட்ட வுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப் படவுள்ள கவுன்சிலர்கள் பதவி யேற்க உள்ளனர், இதற்காக, 6  ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும்  ரிப்பன் மாளிகையின் 2-வது தளத்தில் உள்ள மன்றக் கூட்டரங்கம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது,