districts

img

படத்திறப்பில் வயநாடு நிதியளிப்பு

திருவள்ளூர், ஆக 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழவரம் ஒன்றிய செயலாளரும் ஞாயிறு  ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லை யனின் தந்தை ஜி.வரதராஜ்  படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிறு கிராமத்தில் நடைபெற்றது. வரதராஜ் உருவ படத்தை சிபிஎம்-ன்  மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம் புதனன்று (ஆக 21), திறந்து வைத்தார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துளசிநாராயணன், ஏ.ஜி.சந்தானம், மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன், ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார், கோயில் நில பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.வி.நக்கீரன், விதொச மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், மூத்த உறுப்பினர் கே.செல்வராஜ்,  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உட்பட பலர்  கலந்து கொண்டனர். வயநாடு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரத்தை மத்திய குழு உறுப்பினர் பி.சண் முகத்திடம்,  எல்லையன் குடும்பத்தினர் வழங்கினர். இதில் எல்லையன் சகோதரர் கள் ஜி.வி.டில்லிபாபு, ஜி.வி.பாஸ்கர் மற்றும்  உறவினர்கள் கலந்து கொண்டனர்.