சென்னை.ஏப்,23- வே கூல் இந்தியா பிரை வேட் லிமிடெட் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வேக மாக விற்பனையாகும் பேக்கேஜ் செய்யப்பட்ட நுகர்வு பொருட்களின் (எஃப்எம்சிஜி) வணிகத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம் அதன் வருவாயை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக வேகூல் பிராண்ட் நெக்ஸ்ட் என்ற முழுவதும் வே கூல் மானியத்தில் இயங்கும் நிறுவனத்தை துவக்கி யுள்ளது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.பி. ரவீந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார். மதுரம் என்ற பெயரில் அரிசி , கிச்சன்ஜி என்ற பெயரில் பேக் செய்யப் பட்ட தரமான மளிகை பொருட்கள். ஃப்ரெஷே என்ற பெயரில் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை இந்த புதிய நிறுவனம் விற்பனை செய்து வரு கிறது. கடந்தாண்டு இந்த தயாரிப்புகள் மூலம் கிடைத்த வருவாயை இந்த ஆண்டு இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளோம்,” என்று வேகூல் நிறு வனத்தின் எம்டி கார்த்திக் ஜெயராமன் கூறினார். இல்லத்தரசிகளிடம் தங்களது பிராண்டை நிலை நிறுத்துவது, சில்லறை விற்பனை யாளர்க ளின் நம்பிக்கையை அதி கரிப்பது ஆகியவை எங்க ளது உடனடி இலக்கு என்று ரவீந்திரன் கூறினார்.வே கூல் நிறுவனம் விவ சாயிகளிடமிருந்து நேரடி யாக உணவுப் பொருட் களை கொள்முதல் செய்வ தன் மூலம் அவர்களுக்கு நியாயமான விலை கிடைப் பதை உறுதிப்படுத்தி யுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.