திருவள்ளூர், டிச. 25- வட கிழக்குப் பருவ மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 முக்கிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கடந்த மாதம் முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. தற்போது நீர்வரத்து குறைந் துள்ளது இதனால் புழல் ஏரி மற்றும் சோழவரம் ஏரிகளில் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது 34.99 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இங்கு 3213 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தற்போது பூண்டி நீர்தேக்கத்திற்கு 869 கனஅடி நீர் வரத்து உள்ளது. இதனால் நீர்த்தேக்கத் திலிருந்து உபரி நீர் 83 கன அடி கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப் பட்டுள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்க இணைப்புக் கால்வாய் வழியாக 424 கன அடி அளவுக்கு நீரும், பேபி கால்வாய் வழியாக 14 கன அடி நீரும் மொத்தம் 556 கன அடி நீர் அனுப் பப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த உயரமான 21.20 அடி உயரத்தில் 20.29 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3190 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 165 கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து குறைவால் சென்னை குடிநீருக்காக 145 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது, உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 23.04 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3383 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 375 கன அடியாக உள்ளது. ஏரியிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 125 கன அடி, சென்னை குடிநீருக்காக 103 கனஅடி வெளி யேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த உயரமான 18.86 அடி உயரத்தில் 17.86 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 881 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது. வெளியேற்றம் இல்லை. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 36.61 அடியில் 36.61 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவான 500 மில்லியன் கன அடி. தற்போது நீர்த் தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 53 கன அடியாக உள்ளது. நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 53 கன அடி வெளி யேற்றப்பட்டு வருகிறது.