districts

வீடுகளுக்கான குடிநீர்-கழிவுநீர் கட்டணம் உயர்ந்தது

சென்னை,ஏப்.9- சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உள்ளன.   இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.885 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இதில் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம் ரூ.505 கோடியும் இதர லாரி குடிநீர் வழியாக ரூ.380 கோடியும் கிடைத்து வருகிறது. இந்த வகையில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-ம் அரையாண்டு என பொது மக்களிடம் இருந்து வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்தி வரு கின்றனர் இதில் வீடுகளுக்கு குடிநீர், கழிவு நீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் 7 விழுக்காடும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் இந்த மாதத்தில் இருந்து 84 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  சமயத்தில் விரி வாக்கப்பட்ட மண்டலங்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியாக இருந்தால் அங்கு குடிநீர் கழிவுநீர் கட்டணம் 5 விழுக்காடு கமர்சியலுக்கு 10 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் லாரி தண்ணீர் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ரூ.475-ல் இருந்து ரூ.499 ஆகவும், 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ரூ.700-ல் இருந்து 735 ஆகவும், 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ரூ.1260 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான குடி நீர் கட்டணம் 6 ஆயிரம் லிட்டர் ரூ.700-ல் இருந்து ரூ.770 ஆகவும் 9 ஆயிரம் லிட்டர் ரூ.1000-த்தில் இருந்து ரூ.1100 ஆகவும், 16 ஆயிரம் லிட்டர் ரூ.1700-ல் இருந்து ரூ.1870 ஆகவும் விலை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. கமர்சியல் மீட்டர் உள்ள தண்ணீர் உபயோகத்துக்கு 10 கிலோ லிட்டர் 40 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.263 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கட்டண உயர்வு ஏப்ரலில் இருந்து செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜனவரி மாதமே அறிவிப்பு வெளியிடப்பட்ட தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.