districts

img

தொழிற்பயிற்சி ஆசிரியர்கள் கடலூரில் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்எஸ்டிஇ பரிந்துரையின்படி முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்பயிற்சி ஆசிரியர்கள் கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ரச்சந்திரன், மாவட்டச் செயலாளர் எல்.அரி கிருஷ்ணன், ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.காசிநாதன், வேளாண் துறை மாநில துணைத்தலைவர் எஸ்.வெங்கடேசன், நெடுஞ்சாலைத்துறை மாவட்டச் செயலாளர் ராமர், சங்கத்தின் துணைத் தலைவர் ராமானுஜம், கிளைச் செயலாளர் தர்மலிங்கம், இணை செயலாளர் பூபாலன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.