districts

விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை

ஆலந்தூர், ஜன. 20-  நாட்டின் 74-வது சுதந்திரதின விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை)  கொண்டாடப்பட உள்ளது. இந்த குடியரசு தின விழாவை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  உள்துறை அமைச்சக அறிவு றுத்தலின் பேரில்  நாடு முழுவதும்  விமான  நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலை யத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை  வியாழனன்று இரவு முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது. சென்னை விமான நிலையத் திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு  கேட் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். அதைப்போல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பரிசோதிக்கின்றனர்.    விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிக ளுக்கும் குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து  வருகின்றனர். விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை சோதிக்கின்றனர்.    பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங் களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளி லும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்ன தாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு  சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனர்.  வரும் ஜனவரி 30-ந் தேதி நள்ளிரவு வரை  இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு  பாதுகாப்பு, வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில்  பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.