சாதிக்கு ஒரு தொழில் எனும் ஒன்றிய அரசின் மநுவாத போக்கான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவர் பி.காத்தவராயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, சு.சம்பத்குமார் (வழக்கறிஞர்), குமரேசன் (விசிக), சடகோபன் (திராவிடர் கழகம்), தலித்குமார் (இந்திய குடியரசு கட்சி), இரா.சிவா உள்ளிட்ட பலர் பேசினர்.