சிதம்பரம், மார்ச் 18- விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர் தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சி.பி.எம் அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. குழுவின் தலைவர் கௌதம் சன்னா, உறுப்பி னர்கள் பூவிழியன், ஆதி மொழி, இளமாறன், அப்துல் ரகுமான்.நீலவானத்து நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்து கேட்ட னர். இதில் விசிக மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, நகர செயலாளர் ஆதிமூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பி னர் எஸ். ஜி. ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர்.மக்கின், மாவட்டத் துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், வட்டச் செய லாளர் தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் முக மது அஸ்ஸலாம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் குமரன், மதிமுக நிர்வாகிகள் குமார், பார்த்தீபன், விசிக நிர்வாகிகள் கோ. நீதி வளவன், குறிஞ்சி வளவன், ஓய்வு பெற்ற பொறியாளர் கலியபெருமாள், முருகை யன் உள்ளிட்டோர் பங்கேற்று தொகுதியின் வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித் தும் பல்வேறு கருத்துக் களை தெரிவித்தனர்.