மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி ஞாயிறன்று (செப்.29) விருகம்பாக்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சத்தியமூர்த்தி பிளாக் பகுதியில், கிளைத்தலைவர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொடியேற்றி, பெயர்ப் பலகையை திறந்து வைத்து தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதிச் செயலாளர் மணிமாறன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.