சென்னை,டிச. 6- சென்னையில் வைரஸ் காய்ச்சல், புளூ காய்ச்சல் உள்ளிட்ட பருவகால நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. மழை, பனி, குளிர் போன்றவற்றால் வைரஸ் தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கி வருகிறது. காய்ச்சல், உடல் வலி, இருமல், சளி போன் றவை இதன் அறிகுறியாக இருந்தாலும் தொண்டை வலியும் அதிகமாக உள்ளது. சீசனுக்கு வரக்கூடிய இத்தகைய வைரஸ் மூலம் ஏற்படக்கூடிய காய்ச்சல் பொதுவாக 3 நாட்களில் சரியாகிவிடும். ஆனால் தற்போது ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. சென்னையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருப்ப தாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். அரசு மருத்து வமனையில் காய்ச்சல் வார்டுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.