districts

img

விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

விழுப்புரம், ஜூலை.11- 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடு துறைக்கு ஏற்கனவே தினமும் காலை 6 மணிக்கும், மதியம் 2.40 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காலை 6 மணிக்கு புறப்பட்ட ரயிலை மட்டும் இயக்க முதல்கட்டமாக தெற்கு  ரயில்வே அனுமதியளித்து கடந்த 8 மாத காலமாக அந்த ரயில் இயக்கப்பட்டு வரு கிறது. ஆனால் விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.40 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் மயிலாடுதுறைக்கு இயக்கப்பட்ட ரயில் சேவை மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.  இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்தது.  விழுப்புரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் ரயில் சேவை ஜூலை 10-ந் தேதி முதலும், மதியம் 2.40 மணிக்கு புறப்படும். ரயில் ஜூலை 11-ந் தேதி முதலும் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ள்ளது. இம்மார்க்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.