விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் கூடம் வெட்டப்பட்ட மரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், கட்டடம் விரைவில் பழுதடையும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.