விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு சார்பில் சிதம்பரம் பெரியகுமட்டி கிராமத்தில் நகாய் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன், மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் விஜய், மூத்த தலைவர் கற்பனைச் செல்வம், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.