districts

img

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மாறப்பள்ளி கிராம மக்கள்

கிருஷ்ணகிரி, அக்.4-  தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாறப்பள்ளி ஊராட்சி பெட்டப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சிமன்றத் தலை வர் நஸ்ரின் தாஜ்  தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் சாந்தம்மா முன்னிலை வகித்தார். ஒன்றிய அலுவலர் செயவஜா ,ஊராட்சி அலு வலர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2 ஆண்டுகளை கடந்தும் ஊராட்சி மன்ற நிர்வாகம் அமல்படுத்தப்பட வில்லை. துப்புரவு பணி முறை யாக நடைபெறவில்லை. இதனால், குப்பைகள் மலைப்போல் குவிந்து வருகிறது. கழிவுநீர் கால்வாய் மற்றும் சுகாதார வசதிகளும் செய்து கொடுக்க வில்லை. 35 விழுக்காட்டிற்கு மேல் பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் வசிக்கும் இந்த ஊராட்சியில் போதிய அடிப்படை வசதி கள் செய்து கொடுக்கப்படவில்லை. ஊராட்சி அலுவலர் சம்பத்குமார், கிராம மக்களின் கோரிக்கைகளை கிராம நிர்வாகத்திற்கும்,வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்வ தில்லை. எனவே, அவரை பணி மாற்றம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை எதையும் ஊராட்சி மன்ற நிர்வாகம்  செவி சாய்ப்பதில்லை இதனால் அப்பகுதி மக்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரைக்கும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.