விழுப்புரம், ஜூன் 7- விழுப்புரம் அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் அருகே உள்ள வி.அகரம் கிராம ஏரியில் கடந்த சில ஆண்டு களாக தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்து வருவதாக கூறப்படு கிறது. இதன் காரணமாக மழைக் காலங்களில் ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் பாதித்து வருகின்றனர். ஆகவே, இந்த ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனு அளித்து கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்களும் விவசாயிக ளும் சென்னை -கும்பகோ ணம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “ஆக் கிரமிப்பால் காணாமல் போன ஏரியை கண்டு பிடித்துத்தர வேண்டும்” என்று கோஷம் எழுப்பினர். இந்த மறியலால் விக்கிர வாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, இதுபற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் ஆக்கி ரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றும் காவல்துறையினர் உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட் டத்தை விலக்கிகொண்டனர்.