districts

img

புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு மொட்டையடித்து கிராம மக்கள் போராட்டம்

காஞ்சிபுரம், ஏப்.16- சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமானநிலையம் அமை ப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத் தப்பட உள்ளன. இதற்கு 13 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து 264 நாளாக போராடி வருகிறார்கள். மேலும் கிராமசபை கூட்டங் களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றி வரு கின்றனர்.  இந்த நிலையில், ஞாயிறன்று(ஏப்.16) காலை ஏகனாபுரம் பேருந்து நிலையம் அருகே ஆண்கள் மொட்டை அடித்துக் கொண்டும், கையில் திருவோடு ஏந்தி பிச்சை  எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.