சென்னை, மார்ச் 17- தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள் ளதால் வடசென்னையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த ஏப்.19 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதியை அறிவித் தது மட்டுமல்லாமல் கடை பிடிக்க வேண்டிய வழிமுறை களும் வெளியிடப்பட்டன. பணம், பொருட்கள் மற்றும் மது போன்றவற்றை விநியோகம் செய்யப்படு வது தீவிரமாக கண்காணிக் கப்படும். இரவு நேரங்களில் வங்கிகள் ஏடிஎம் போன்ற வற்றிற்கு வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முழுவதுமாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட உடனே தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்ததையடுத்து தேர்தல் ஆணையம் பண பரிவர்த்தனைகளை தீவிர மாக கண்காணித்து வருகிறது. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் செய்யப் பட்ட விளம்பரங்களை அகற்றும் பணிகளும், சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும், சுவரொட்டிகளை அகற்றும் பணியும், தலை வர்களின் சிலைகளை மூடி மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வடசென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதி காலையில் இருந்தே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், கார் என பணம் கொண்டு செல்ல ஏதுவாக கருதப் படும் அனைத்து வாகனங் களையும் மடக்கி தகுந்த ஆவணங்கள் உள்ளதா? பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை செய்து வருகின்ற னர். இந்த சோதனையால் கோயம்பேடு செல்லும் வியாபாரிகள், காசிமேடு மீன்பிடி சந்தைக்கு மொத்த வியாபாரம் செய்ய பணம் கொண்டும் செல்லும் வியா பாரிகள் அச்சத்துடன் காவல் துறை கண்காணிப்பு இல்லாத வழியாக சென்றனர். இந்த சோதனை இறு வியாபாரிகளும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பணம் எடுத்துச் செல்பவர்களும் தான் அதிகளவில் பாதிக்கப் படுகிறார்கள்.