விழுப்புரம், ஜூன்.15-
விழுப்புரம் மாவட்டம், மரக் கணம் வட்டத்திற்கு உட்பட்டது வேப்பேரி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த காளி தாஸ் அரசு பேருந்து நடத்துநர். இவரது மனைவி வள்ளி.
தாங்கள் நடத்தும் சீட்டு கம்பெனியில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் கட்டிய பணத்தைவிட இரண்டு மடங்கு பணம் தருவதாக கூறியுள்ளனர். மேலும், ரியல் எஸ்டேட்டிலும் பணத்தை முதலீடு செய்யுமாறும் கூறியுள்ளனர். இந்த ஆசை வார்த்தைகளை நம்பி 120 பேர் 5 லட்சத்திலிருந்து 15 லட்ச ரூபாய் வரை என ரூ. 7 கோடியே 17 லட்சம் ரூபாய் கட்டியுள்ளனர்.
ஆனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். பாதிக்கப் பட்டவர்கள் திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். எந்த நட வடிக்கை எடுக்கவில்லை. இத னால்,30க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயை சந்தித்தனர். அப்போது, மோசடி நபர்களை கைது செய்ய வேண்டும். அவரிடமிருந்து தங்க ளுக்கு சேரவேண்டிய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.