districts

வேலூர் திட்டக் குழு ஆலோசனை கூட்டம்

வேலூர். ஜூன் 28 -

     வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  

    இதில் குடிநீர் வசதி, ஏரிகள் தூர்வாருதல், நெடுஞ்சாலைகள் ஓரம் அகற்றப்பட்ட மரங்களை விட கூடுதலாக மரங்கள் நடுவது குறித்தும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு மற்றும் திட்டகுழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அரசு அதிகாரிகளும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற னர்.