மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், குடியாத்தம் நகர செயலாளருமான பி.காத்தவராயன் தாயார் பி.ராஜேஸ்வரி திங்களன்று காலமானார். குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், எம்.பி.ராமச்சந்திரன், கே.சாமிநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.