மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதி, 173 மற்றும் 180வது வட்டக் கிளைகள் சார்பில் புதனன்று (நவ.21) திருவான்மியூரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர் நகர் கிளைச் செயலாளர் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார், பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, பகுதிக்குழு உறுப்பினர்கள் என்.குமரன், சங்கீதா, செல்வி உள்ளிட்டோர் பேசினர்.