பத்திரிக்கையாளர் வே.பெருமாள் எழுதி, தூவல் பதிப்பகம் பதிப்பித்துள்ள 'விபிசி ஒரு ரத்த சரித்திரம் ' நூல் வெளியீட்டு விழா வியாழனன்று ( ஜன.19) சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் வெளியிட, தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் ச.அசோகன் பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், சு.வெள்ளைச்சாமி, எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரா.பாரதி, மா.விஜயகுமார், பத்திரிகையாளர் மயிலை பாலு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்