தாம்பரம், மார்ச் 12- வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300க்கும் மேற்பட்ட விலங்குகள் ஊர்வன பறப்பன உள்ளன. தற்போது கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கிய விலங்கான யானைக்கு அதன் வளாகத்திலேயே சேற்று மண் குளியல், ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. சிம்பான்சி குரங்குகளுக்கு அதன் வளாகத்தில் ஷவர் குளியல் அமைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பறவை இனங்களுக்கு அதன் கூண்டுகளை சுற்றி சாக்கு கோனி மூலம் வெயில் உள்ளே வராத அளவுக்கு திரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது சிங்கம், புலி, மான்கள், காட்டு மாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவை வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது.