districts

லஞ்சத்தில் திளைக்கும் வானூர் வட்ட வழங்கல் அலுவலர் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

விழுப்புரம், மார்ச் 29- பொது மக்களின் கோரிக்கைகளுக்கு லஞ்சம் வாங்கும் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டாட்சியர் அலுவலக வட்ட வழங்கல் அலுவலரின் செயலை கண்டித்து அவரிடம்  டம்மி ரூபாய் தாள்களை லஞ்ச மாக கொடுக்கும் போராட்டம் புதனன்று  வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்றது.   லஞ்சம் பெறும் அதிகாரியை விமர்சித்து நடைபெற்ற இந்த  போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் எம்.கே. முருகன் தலைமை தாங்கினார், சிபிஎம்  மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன்,சே.அறிவழகன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அர்ச்சுணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்த விவரம் வருமாறு : வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல்  அலுவலராக  ஏ.ராம கிருஷ்ணன் என்பவர் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் தொடர்பாக கொடுக்கும் மனுக்களுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் எந்த வேலையும் செய்வார். இல்லா விட்டால் எந்த மனுவையும் நிராகரிப்பார். புதிய ரேசன் கார்டுக்கு - ரூ.5,000- கார்டை இரண்டாகப் பிரிக்க - ரூ. 3,000- புதிய பெயர் சேர்க்க ரூ.2,000- பெயர் நீக்கம் ரூ.1000- என  கட்டாயப்படுத்தி கல்லாகட்டி வருகிறார். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படு வதில்லை, அவரது லஞ்ச ஊழலுக்குத் உயர்அதிகாரிகள் துணை போவதாக கூறப்படுகிறது. நியாயம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர் எஸ்.பாலமுருகன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்கு தல் நடத்தியதோடு பொய்வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே  ஊழல் அதிகாரி மீது  குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவர்  கொடுத்த பொய் புகாரை திரும்பப்பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் வலி யுறுத்தினர். இதில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.