திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் உரிமம் இல்லாமல் ஸ்ரீராம் பட்டாசு கடை நடத்தி வந்தார். வீட்டின் பின்புறம் உள்ள பட்டாசு குடோனில் வெள்ளியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு, கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் கடையின் அருகில் இருந்த 5 வீடுகள் சேதமடைந்தது.