districts

img

வந்தே பாரத் உற்பத்தியை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்காதே சிஐடியு

சென்னை, ஜூன் 18

     வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டி உற்பத்தியை பன்னாட்டு நிறு வனங்களிடம் ஒப்படைக்க ஊழியர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனி யன் (சிஐடியு) 48ஆவது மாநாடு ஐசிஎப் வடக்கு காலனியில் தோழர்கள் எம்.ருத்ரகுமார், என்.மோகன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.  

    தலைவர் எஸ்.ராம லிங்கம் தலைமை தாங்கி னார். பி.எஸ்.உமாபதி சங்கக் கொடியை ஏற்றினர். வி.சுரேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மத்திய சென்னை மாவட்ட துணைத்  தலைவர் எஸ்.சந்தானம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் கே.டி.ஜோஷி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்,  

    டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

    முன்னதாக ஜி.நட ராஜன் வரவேற்றார். இணைச்செயலாளர் டி.ரமேஷ்பாபு நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

    வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் உற்பத்தியை பன்னாட்டு தனியார் நிறுவனங்களிடம் வழங்கக் கூடாது,    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, உத்தரவாதமுள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  290 குரூப் டி பணியிடங்களை சரண்டர் செய்வதை கைவிட வேண்டும்,  2004 குரூப் டி மற்றும் சி காலிப்பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ராய புரம் ரயில்வே அச்சகம் உள்ளிட்ட அனைத்து ரயில்வே அச்சகங்களை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ரயில்வே, பதுகாப்புத் துறை, ஐசிஎப் உள்ளிட்ட பொதுத் துறை நிறு வனங்களை தனி யாரிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

புதிய நிர்வாகிகள்

    தலைவராக சி.சத்திய மூர்த்தி, பொதுச்செய லாளராக பா.ராஜாராமன், பொரு ளாளராக கே.டி.ஜோஷி உள்ளிட்ட 20 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.