விபத்து வழக்கில் லஞ்சம் தர மறுத்த வேன் ஓட்டுநரை அவமரியாதையாக நடத்திய சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய விபத்து புலனாய்வு அதிகாரிகள் செல்வ விநாயகம், தங்கதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி செவ்வாயன்று (ஏப்.4) காவல் நிலையம் முன்பு ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ம.உதயகுமார், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கபாலி உள்ளிட்டோர் பேசினர்.