திருவள்ளூர், அக் 24- வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இருளர் இன பெண்களிடம் பாலியல் ரீதியாக அணு கும் நுண் நிதி நிறுவன உரி மையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவலாங்காட்டை அடுத்த பூனி மாங்காடு ஊராட்சி இருளர் இன மக்கள் சுமார் 85 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் இங்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் பழங்குடி மக்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சங்கமும் செயல்படவில்லை. மகளிர் சுய உதவி குழுக்களும் செயல்படவில்லை. மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் திட்ட இயக்குனர் பழங்குடி மக்களின் சுய உதவி குழுக் களை கண்டு கொள்வதே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதன் விளைவாக அவர்கள் கந்து வட்டிகும் பலிடம் சிக்கி 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். நுண் நிதி கடன் வழங்கும் வங்கிப் பணி யாளர்கள் இருளர் இன பெண்களை பாலியல் ரீதியாக அசிங்கமாக பேசி வருகிறார்கள். எனவே பழங்குடி மக்களை கந்துவட்டியில் இருந்து மீட்க வறுமை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக ஒழிப்பு திட்டத்தை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சுடன் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சின்ன துரை, மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.