districts

img

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

கடலூர்,செப்.17- அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கடலூர் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பேரவைக்கு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ரவி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பழனியம்மாள் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் வேலை மற்றும் நிதிநிலை அறிக்கையை வாசித்தனர். மாநில பொருளாளர் பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் மற்றும் மாவட்டச் செயலாளர் பழனி, மாநில துணை தலைவர் ஆசைத்தம்பி, அங்கன்வாடி பணியாளர் சங்க மாநிலத் தலைவர் அனுசுயா, மாவட்ட பொருளாளர் குழந்தைவேல், துணை தலைவர் கருணாகரன், மாவட்டச் செயலாளர்கள் பாஸ்கரன், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், தினக்கூலி, ஒப்பந்த, அவுட் சோர்சிங் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும்.  சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதி யர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதி யத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பணிக்கொடை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.