ஒன்றிய மோடி அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆவேச மறியல்
செங்கல்பட்டு,பிப்.16- மக்கள் விரோத தொழிலாளர் தின விரோத ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து திருவள்ளுர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆவேசமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் என இரண்டு மையங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இரண்டு இடங்களிலும் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் , கும்மிடிப்பூண்டி,செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் தேரடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் நெசவாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேலியூரில் பொது வேலை நிறுத்தம் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறுபான்மை நலக்குழுவின் மாவட்டத் தலைவர் தேர்வு
சென்னை, பிப். 15 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் 4வது மாநில மாநாடு ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டு வரவேற்புக்குழு பணிகளில் ஈடுபட்டோருக்கு புதனன்று (பிப்.14) கிண்டியில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், நலக் குழுவின் மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், பொருளாளர் கே.மணிகண்டன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டோர் பேசினர். இந்தக் கூட்டத்தில், நலக் குழுவின் மாவட்ட தலைவராக சுரேஷ் ஆண்டனி தேர்வு செய்யப்பட்டார்.
வாட் வரி சமாதான திட்ட காலநீட்டிப்பு: வணிகர் பேரமைப்பு வரவேற்பு
சென்னை, பிப். 16- வாட் வரி சமாதானத் திட்டம் காலநீட்டிப்பு செய் யப்பட்டுள்ளதை தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்றுள் ளது. இதுகுறித்து பேரமைப் பின் தலைவர் ஏ.எம்.விக்கி ரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: 2017ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த, வணிக வரி நிலுவை சம்பந்த மாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழ்நாடு அரசுக்கு வைத் திருந்த கோரிக்கையை ஏற்று, வணிகர்களுக்கும் அரசுக்கும் சுமூகமான ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக வேட் சமாதானத் திட்டம் ஒன்றை அரசு கடந்த 16.10.2023 தேதியில் அறிவித்து, 15.2.2024இல் முடிவடைவதாக அரசு அறிவித்திருந்தது. அரசு அறிவித்திருந்த அவகாசம் மிகக்குறுகிய காலம் என்பதால் கால நீட்டிப்பு தேவை என அரசின் கவனத் திற்கு எடுத்துச் சென்று வணிகர்களின் கோரிக் கையை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந் தோம். தற்போது வரை 170 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆனால் இது மிக குறைந்த தொகை என்பததோடு, வணிகர்களுக்கும் அரசுக் கும் உள்ள இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள சமா தான திட்டத்திற்கு கால நீட்டிப்பு வேண்டும் என்ற பேரமைப்பின் கோரிக் கையை ஏற்று வரும் மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ள அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மேலே குறிப் பிட்டுள்ள கால நீட்டிப்புடன் 2017க்கு பிறகு தணிக்கை செய்யப்படாத வணிகர் களின் கணக்குகளையும் சமாதானத் திட்டத்தில் பங்கேற்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து உதவு மாறு கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
திமுக மூத்த தலைவர் த.வேணுகோபால் மறைவு
திருவண்ணாமலை, பிப்.16- உடல் நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை மக்களவை முன்னாள் உறுப்பினர் த.வேணுகோபால் சிகிச்சை பலனின்றி வியாழனன்று(பிப்.15) உயிரிழந்தார். பின்னர், அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், காட்டாம் பூண்டி கிராமத்திற்கு எடுத்து வந்தனர். அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாநில அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, மக்களவை உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை),கதிர் ஆனந்த் (வேலூர்) , சட்டமன்ற உறுப்பினர்கள் கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன், செங்கம் மு.பெ.கிரி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மலர் வையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பெரியார் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்
கடலூர், பிப்.16- கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் தாவர வியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கருத்தரங்கில் தாவரவியல் துறை தலை வர் நிர்மல் குமார் வர வேற்றார். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தின ராக புதுச்சேரி உயர்கல்வித் துறை உறுப்பினர் ராமானு ஜம் பங்கேற்று பேசினார். இந்த கருத்தரங்கில் பேராசி ரியர்கள் ரவிக்குமார், தேவ நாதன், ஆனந்தராஜ், அன்பழகன், மற்றும் துறை யின் மாணவர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.