districts

img

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாதர் சங்கம் பிரச்சாரம்

சென்னை, செப். 20- பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வட சென்னையில் பிரச்சாரம் நடை பெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் - எண்ணூர் பகுதிக்குழு சார்பில் எர்ணாவூரில் தொடங்கிய பிரச்சாரத்தை வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி தொடங்கி வைத்து பேசுகையில், பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளன. அவற்றை தடுப்பதற்கு மாறாக, மக்களை திசை திருப்பும் வகையில் பிற்போக்கான கருத்துகளை ஆட்சியாளர்களே ஊக்குவித்து வருகின்றனர். கூட்டு வல்லுறவு போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை ஆட்சியாளர்களே பாதுகாக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து தேரடி, அம்பேத்கர் நகர், ராஜா சண்முகா நகர்,  ராமநாதபுரம், பாரதியார் நகர், பாரத் நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் கஸ்தூரி, நிர்வாகிகள் எஸ்.செல்வகுமாரி, கே.கே.புஷ்பா, பி.அலமேலு, சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.