ராணிப்பேட்டை, ஜூலை 30-
உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப் பட்ட ராணிப்பேட்டை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடந்தது.
இதனையடுத்து, நடந்த பேச்சு வார்த்தையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டார். இந்நிலையில், அவர் பணி மாறு தலில் சென்று விட்டார். ஆறு மாதம் கடந்த பின்பும் மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முன்வரவில்லை. இந்த நிலையில், மரங்களை வெட்டி வீழ்த்துவது, விவ சாய விளை நிலங்களில் பயிர்களை அழிப்பது, அப்பாவி விவசாயிகளை மிரட்டி அச்சுறுத்துதல் போன்ற அடாவடி கொடுஞ்செயல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலை வர் எஸ். கிட்டு தலைமையில் மாவட்ட வரு வாய் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், நிலவு குப்புசாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. சந்திரன், செயலாளர் பி. ரகுபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ. தேவ ராஜ், பொருளாளர் என். ரமேஷ், என். காசிநாதன், கட்சியின் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், ஆற்காடு செயலாளர் எஸ். செல்வம், ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
போராட்டத்தின் முடிவில் ராணிப் பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் வினோத்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.