districts

img

நிபந்தனையில்லா ஊதிய பேச்சுவார்த்தை துறைமுகத் தொழிற்சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 28 - ஊதிய பேச்சுவார்த் தையை நிபந்தனையின்றி நடப்பாண்டிலேயே பேசி முடிக்க வேண்டும் என்று மெட்ராஸ் போர்ட் அண்டு டாக் எம்பிளாயீஸ் யூனியன் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் 40வது ஆண்டுப் பேரவை வியாழ னன்று (ஜூலை 28) ராயபுரத் தில் நடைபெற்றது. இந்த பேரவையில், சென்னை துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வந்து செல்ல ஏது வாக கடலின் ஆழத்தை  பராமரிக்க அகழ்ந்தெடுக் கும் புதிய கப்பல்களை வாங்க வேண்டும், பழைய  இழுவை கப்பல், படகு களை பழுதுபார்த்து பயன் படுத்த வேண்டும், காலியாக  உள்ள சுமார் 15 ஆயிரம் பணி யிடங்களை நிரப்ப வேண்டும், தொழிலாளர்கள் பணி ஓய்வு காரணமாக நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து, ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை மாற்றி, நிரந்தர தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். செப்டம்பர் மாதத்திற்குள் பேச்சுவார்த்தையை முடித்து பிஎல்ஆர் போனஸ் வழங்க வேண்டும். மருத்து வமனையில் நீண்டகாலமாக காலியாக உள்ள தலைமை மருத்துவர், மருத்துவர் பணி யிடங்களை நிரப்ப  வேண்டும், தொழிலாளர்க ளுக்கான பதவி உயர்வு களை வழங்க வேண்டும், கேண்டினில் தரமான உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெ.ஜான்போஸ்கோ அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வேலை  அறிக்கையை பொதுச்  செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தியும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் வி.தமிழ்செல்வனும் சமர்ப் பித்தனர். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் சி.திருவேட்டை வாழ்த்திப் பேசினார். நீர்வழிப்போக்குவரத்து ஊழியர் சம்மேளன  அகில இந்திய பொதுச் செய லாளர் டி.நரேந்திரராவ் நிறைவுரையாற்றினார். செய லாளர் எம்.பி.பூமி நாதன் நன்றி கூறினார். முன்னதாக செயலாளர் கே.செல்வம் வரவேற்றார். சங்கத்தின் தலை வராக அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளராக ஏ.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளராக வி.தமிழ் செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.