கடலூர், மார்ச் 31- கடந்த தேர்தலில் ‘கோ பேக் மோடி’ என்று பிரச்சாரம் செய்தோம், இந்த தேர்தலில் கெட் அவுட் மோடி என்று பிரச்சாரம் செய்யவேண்டும் என உதய நிதி ஸ்டாலின் கடலூரில் கேட்டுக் கொண்டார். கடலூரில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பேசினார். தற்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் வருவதற்குள் பெரும்பாலான இடங்களில் இந்தியா கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறுவது உறுதி என மக்கள் தெரிவித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் கை சின்னத்திற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கிற வேட்டாக மாறும். கடந்த மக்களவைத் தேர்த லில் பாஜகவை ஓட ஓட விரட்டி அடித்தீர்கள் . அப்போது கோ பேக் மோடி என தெரிவித்தோம், இப்போது கெட் அவுட் மோடி என தெரிவித்து அதிக வாக்கு வித்தி யாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். தற்போது எதிரிகள் அணி அணியாக பிரிந்து போட்டியிடுகின்றனர். ஆகையால் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக ஆட்சி அமைத்த பிறகு வடலூரில் ரூ100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்பட உள்ளது. 5 கோடி மதிப்பீட்டில் சில்வர் கடற்கரையை சீரமைக்கப்பட உள்ளது. கடலூர் அரசு மருத்துவ மனையில் கூடுதலாக 100 படுக்கை வசதியுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து தற்போதைய வாக்குறுதிகளாக கடலூர் மக்களவைத் தொகுதி யில் உள்ள முந்திரி ஏற்றுமதி யாளருக்கு மீண்டும் 5 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். புதிய வகையான முந்திரி மரங்களை மானிய விலையில் வழங்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் மஞ்சக்குப்பம் மணிக் கூண்டு சீரமைத்து பாதுகாக்கப் படும். கோவிட் பாதிப்பு , புயல் பாதிப்பு, நீட் தேர்வில் இறந்த மாண வர்கள் குடும்பத்திற்கு ஆறு தல் தெரிவிக்க மோடி தமிழ கத்திற்கு நேரில் வரவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு பாஜக அரசு பொறுப்பேற்ற போது ரூ.450 இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.820 தாண்டி உள்ளது. ஆனால் மோடி மகளிர் தினத் தன்று மகளிருக்கு பரிசாக சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக கூறி ஏமாற்று கிறார். இதனை யாரும் நம்ப மாட்டார்கள். தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 29 பைசா தான் மீண்டும் வழங்குகிறார்கள். ஆனால் பாஜக ஆளும் மாநிலத்திற்கு கூடுதலாக வாரி வழங்குகிறார்கள். இதனால் நீங்கள் மோடியை மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும் என பேசினார்.பிரச்சாரக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.