ஆரணி, மே 4-
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (32). இவர் லாரி ஓட்டுநர். இவர் மோட்டர் பைக்கில் கருகத்தாங்கல் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியிலிருந்து ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்தி லேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி தாலுகா காவல் துறையினர் சண்முகம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.