ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு கடலூரில் அனைத்து கட்சி சார்பில் மெழுகு ஏந்தி அஞ்சலி செலுத்த்தப்பட்டது. இதில் திமுக மாநகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், துணை மேயர் தாமரைசெல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், மாவட்ட குழு உறுப்பினர் ஆளவந்தார், சிபிஐ மாவட்ட இணை செயலாளர் குலோப், நகரச் செயலாளர் நாகராஜன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.