districts

img

சுவாமி சகஜானந்தர்பிறந்த நாள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை மாகாண சட்ட மேலவை நியமன உறுப்பினராகவும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த சுவாமி சகஜானந்தர் சிதம்பரத்தில் நந்தனார் பெயரில் கல்விச்சாலை ஏற்படுத்தி கல்விப் புரட்சி செய்தவர். இவரின் பிறந்த நாளான ஜனவரி 27 அன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அவரின் பிறந்த ஊரான மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், ப.செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.