சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவையடுத்து அவரது உருவப்படத்திற்கு, கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, எஸ்.ஜெயசங்கரன், அசோகன், தீ.சந்துரு, மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு, கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.அணு உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாநில உதவி பொதுச் செயலாளர் வி. குமார் இரங்கல் உரையாற்றினார்.