தமிழகத்தில் 12,618 கிராம ஊராட்சி களில் சுமார் 19,680 மேற்பட்ட கிராமங்க ளில் வசிக்கும் 4.5 கோடி மக்களின் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவை களை மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர், தூய்மை பணியாளர்கள் என மாநிலத்தில் சுமார் 3 லட்சம் நிறை வேற்றி வருகின்றனர். சேவை மனப்பான்மையுடன் மிக, மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவர்கள் அதிகாலை 4 மணிக்கு துவங்கி, இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம், ஊரை தூய்மைப் படுத்துதல், பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எந்தவித பணி பாதுகாப்பும் இல்லாத நிலையில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். கடுமையான அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் இவர்கள் மிகக்குறைவான ஊதியத்தில் அதாவது ரூ. 1000 துவங்கி 7000 ரூபாய் வரை மட்டும் ஊதியமாக பெற்று வருகின்றனர்.
அவமதிக்கப்படும் அரசாணைகள்
“பேரு பெத்தபேரு தாக நீலு லேது” என்கிற சொல்லாடல் போல் பேருக்கு தான் அரசு ஊழியர் பட்டம். ஆனால் எந்தவித சமூக, சட்ட பாதுகாப்பும் இல்லாத நிலை தான் உள்ளது. பல்வேறு அரசாணைகள் வெளியிட்டும் அவை நிறைவேற்றப்டவில்லை. 7 வது ஊதிய குழு அரசாணை 303 (11.10.2017) வெளியாகி 63 மாதங்கள் ஆன பின்னரும் இதுவரை அமலாகவில்லை. 3 ஆண்டுகள் தொடர்ந்து பணி முடித்தால் பணி நிரந்தரம் என்ற 385வது அரசாணை ( 1.10.2010), கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை ரூ.15ஆயிரம் அரசாணை 256 (28.5.2021) குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் அரசாணை 62 (2D) (11.10.2017) பிரதிமாதம் 5 ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் அரசாணை 89, மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்க ளுக்கு ரூ.1400 ஊதிய உயர்வு அரசாணை 20 (4.2.2021) உள்ளிட்ட பல அரசாணைகள் இருந்தும் ஆட்சி யாளர்கள் அமலாக்க மறுத்து வருகின்றனர்.
நிரந்தர பணிகளை ஒப்பந்தத்தில் விடுவதா?
நிரந்தர பணிகளை ஒப்பந்தத்திற்கு விடக்கூடாது என்கின்ற சட்டத்தை ஆட்சியாளர்கள் காலில் போட்டு மிதிக்கிற அவலம் தொடர்கிறது. குப்பை நிரந்தரம், குப்பை அள்ளும் கூடை நிரந்தரமாக உள்ளது. குடி நீரை வழங்கி, சமூகத்தை சுகாதாரமாக பாதுகாத்து வரும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் மட்டும் கிடையா தாம். தொகுப்புதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என்கிற பல்வேறு அவதாரங்களில் காலம் காலமாய் தற்காலிக தொழிலாளியாய் இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 60 வயது வரை உள்ளாட்சிகளில் பணிபுரிந்து விட்டு ஓய்வு பெறும் போது, பென்சன், பணிக்கொடை என ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் வீட்டிற்கு வெறுங்கையோடு அனுப்புகிற ஈவு, இரக்கமற்ற செயலை தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வருவோர் செய்கிறார்கள். காவல் துறையில் பணிபுரிந்து மோப்ப சக்தி இழந்து ஓய்வு பெறும் நாய்களுக்கு கூட 4000 ரூபாய் ஓய்வூதிய மாக வழங்கும் அரசு உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு கருணை காட்டமறுக்கிறது. ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 37 ஆண்டுக ளுக்குப் பிறகு 2014 ல் தான் குறைந்தபட்ச ஊதிய மறு நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் நமது சம்மேளனமான தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாநில பொது செயலா ளர் கே.ஆர்.கணேசனை அரசு நியமித்தது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு முதன்மை செயலாளர் 11-10-2017 அன்று அரசாணை 2(னு) 62 வெளியிடப்பட்டது. இதில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.308, பஞ்சபடி ரூ.124.16 ஆக மொத்தம் ரூ.432.16 வீதம் மாத ஊதியம் ரூ.11236.16 வழங்க வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.355.16 வீதம் மாதம் ரூ. 9234.16 வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இவையாவும் இமியளவும் பின்பற்றப்படவில்லை.
7 வது ஊதிய குழு அரசாணை 303ஐ11-10-2017 அன்று வெளியிடப்பட்டது. அந்த அடிப்படையில் கூட தமிழ்நாட்டில் உள்ளாட்சியில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், ஒவ்வொரு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்கிற அக்கறைகூட அரசுக்கு இல்லை. ஆட்சி முடிகின்ற நேரத்தில் கடந்த அதிமுக அரசு சட்ட மன்றத்தில் 110 விதியின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.2600 லிருந்து ரூ.4000 என உயர்த்தி 4-2-2021 முதல் அமலாக்கிட வேண்டும் என அரசாணையை வெளி யிட்டது. ஆனால் 23 மாதங்கள் ஆகியும் இதுவரை அமலாகவில்லை. அதேபோல் ஒன்றிய பாஜக அரசு காந்தி பிறந்த அக்டோபர் 2 , 2017 ல் சுகாதார பாரதம், தூய்மை இந்தியா என்கின்ற முழக்கத்தோடு 10-4-2018 அன்று அரசாணை 54 அடிப்படையில் தமிழ்நாட்டில் 66025 தூய்மை பணியாளர்களை நியமித்தது. ரூ.2600 மாத ஊதியம் தர வேண்டும் என்று ரூ 206.04 கோடி ஒதுக்கியது. இவர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்கினால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்ற காரணத்திற்காகவும், பிஎல்எப் மற்றும் விபிஆர்சி என்கிற சுய உதவிக் குழுக்கள் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.இவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என சிஐடியு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2020 டிசம்பர் 9 ம் தேதி முதல் ரூ.1000 உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.3600 வழங்கப்படுகிறது.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் பரிதாப நிலை
அதேபோல கிராமபுற மக்களை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாத்து வரும் டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களின் வாழ்க்கைபாடு சொல்லிமாளாது. இவர்களை கூலித்தொழிலாளிக்கான தினக்கூலியாக ரூ.451 வழங்கப்படுகிறது. இதில் வாகனத்திற்கு பெட்ரோல், உணவு என ரூ.200 செலவாகிறது. மீதமுள்ள ரூ.250 ல் எப்படி வாழ்க்கை நடத்துவது என தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். அடுத்த நாள் வேலை கிடைக்குமா? என்று சூழலில் ஒவ்வொரு ஊராட்சியில் ஒருவர் என சுமார் 13,000 பேர் பணிபுரிகின்றனர். 10 ஆண்டுகள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் என திமுக தேர்தல் அறிக்கை யில் சுட்டிக்காட்டியுள்ள சூழலில் தமிழ்நாட்டில் மேற்கண்ட உள்ளாட்சி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வருகிற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அரசு அறிவித்திட வேண்டும். இவர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, ரூ. 21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்,மேலும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என சிஐடியு கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 40,276 பள்ளிகளில், ஏறக்குறைய 68,55,628 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவற்றில் கற்பிக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உட்பட சுமார் ஒரு கோடி பேரின் சுகாதாரத்தை பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு ரூ.1000 முதல் 2500 வரை மாத ஊதியம் வழங்குகிறது. இந்த ஊதியத்தில் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் என அரசுக்கு தெரியாதா? எனவே 40 ஆயிரம் பள்ளி தூய்மை பணியாளர் களை நிரந்தரப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்குவதை வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திட வேண்டும். 3 லட்சம் உள்ளாட்சி ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என ஜனவரி 30 அன்று தமிழ்நாடு ஊராட்சி OHT ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர் மாநில ஒருங்கிணைப்பின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி OHT ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத்தலைவர் ஏ.ஜி.சந்தானம் அறைகூவல் விடுத்துள்ளார்.