districts

img

நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 5 -

    குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி திங்களன்று (ஜூன் 5) பல்லவன் சாலை யிலுள்ள ஓய்வூதியர் டிரஸ்ட்  அலுவலகம் முன்பு ஓய்வூதி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு 2020 ஆம் ஆண்டு முதல் நிலுவை தொகைகளை வழங்காமல் உள்ளனர். இதனால் மாநகர  போக்குவரத்து கழகத்தில் சுமார் 300 பேரும், மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள னர்.

   எனவே, ஓய்வூதிய நிலு வையை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத் துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 93 மாதமாக உயர்த்தி வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

   தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை கோட்ட தலை வர் குருமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாநில  துணைப் பொதுச்செய லாளர் கே.வீரராகவன், துணைத் தலைவர் ஏ.ரை மண்ட், கோட்ட பொருளா ளர் ஆதிமூலம், நிர்வாகிகள் தாமோதரன், குப்புசாமி, முருகேசன், பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர்.