districts

img

போக்குவரத்து ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம்

சென்னை, ஜன. 2 - போக்குவரத்து கழகத் தில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்ப வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் 3 நாள் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தினர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழங்க ளின் வரவுக்கும் செலவுக் குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க  வேண்டும், ஓய்வு பெற்ற  ஊழியர்களுக்கு 100 மாதங் களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண் டும், தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்,  வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி டிச.19ந் தேதி போக்குவரத்து அனைத்து தொழிற்சங் கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலசங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது. இதன்படி, ஜன.4க்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனையடுத்து டிச.27 தொழிலாளர் நல தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு உள்ளிட்ட 24 சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இத னால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வில்லை. தொழிலாளர் ஆணையர் அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இந்த நிலையில், வேலை நிறுத்த தயாரிப்பு பணிகளை தொழிற்சங்கங்கள் செய்து  வருகின்றன. இதனை யொட்டி டிச.30, 31, ஜன.2 தேதிகளில் பணிமனைகள், பேருந்து நிறுத்தங்களில் தொழிலாளர்கள் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி னர். அதன் ஒருபகுதியாக மாநகர போக்குவரத்து கழகத்திலும் பிரச்சாரம் நடைபெற்றது.