விழுப்புரம், ஜன. 12- மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது அவருடன் செல்லும் ஒரு உதவியாளருக்கு தமிழக அரசின் சாதாரண நகர பேருந்துகளில் பயணிக்க அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர்.வி.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி பேசுகையில், மாற்றுத்தி றனாளிகள் அரசு பேருந்தில் பய ணம் செய்யும் போது அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கு தமிழக அரசின் சாதாரண நகர பேருந்துகளில் அரசாணை (நிலை) எண்.01 நாள்:03.06.2021 கட்டண மில்லா பயண வசதி வழங்கப்பட்டுள்ளது 2016ஆம் ஆண்டு மாற்றுத்திற னாளிகள் நலச் சட்டம் நடைமுறை யில் உள்ள நிலையில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகை யான மாற்றுத்திறனாளிகளில், 40 சதவிகிதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களது துணையாளர் ஒருவரு டன் தமிழக அரசின் போக்கு வரத்துக் கழகங்களால் இயக்கப்ப டும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டண மில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற மாற்றுத்திறனாளி கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையைப் பேருந்து நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். இந்நிலையில் அரசாணை யின்படி விழுப்புரம் மாவட்டத்தில் இயக்கப்படும் நகர பேருந்துகளில் பயணிக்கும் 21 வகையான மாற்றுத்திறனாளிகளிடம் தேசிய அடையாள அட்டை நகல் கேட்கப்படுகிறது. ஆனால் அவரு டன் பாதுகாவலராக செல்லும் உதவியாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை தொடர்கிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ளாமல் சில நடத்துனர்கள், ஓட்டுநர்கள் தரக்குறைவாக நடந்து கொள்ளும் நிலையும் உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளின் உதவியாளரை பேருந்துகளில் கட்ட ணம் இல்லாமல் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்தை சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எச்சரித்தார். இதில் மாவட்டத் தலைவர்.பி.முருகன், மாவட்டப் பொருளாளர் பி.உமா, துணை செயலாளர்கள் எம்.கே.முருகன், n ஜயக்குமார், பாவாடைராயன், மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.