ஆலந்தூர், ஜூலை 4- சென்னை விமான நிலையம், துறைமுகம், சரக்குப்பிரிவான கார்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுக ளில், சுங்கத்துறை துணை ஆணை யர்கள், உதவி ஆணையர்கள் என்று பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால் இடம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தர வில், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 35 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைப் போல் சுங்கத்துறை முதன்மை ஆணை யர் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட் டுள்ளார். மொத்தம் 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் துறைமுகத்திலிருந்து, சென்னை விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் கார்கோ பகுதிகளுக்கும், அதைப்போல் கார்கோவில் ஏற்றுமதி பிரிவில் பணியில் இருப்பவர்கள், இறக்குமதி பகுதிக்கும், இறக்குமதி பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுமதி பகுதிக்கும், சிலர் விமான நிலைய கொரியர் அலுவலகம், போதை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்குப் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.