கடலூர், நவ.2- மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டி தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். ஆயத்த பயிற்சி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் இணைந்து ஆண்டுதோறும் 20 மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் தேர்ந்தெடுத்து தனி குழுவாக அமைத்து அவர்க ளுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்து உரிய ஆவணங்க ளுடன் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 05.11.2024 பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.