சென்னை, பிப். 26- சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜ புரத்தை சேர்ந்தவர் உதய குமார் (56). இவர் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மூத்த உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர் வெள்ளியன்று சிட்லபாக்கத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்பதற்காக குரோம் பேட்டை ராதா நகர் அருகே உள்ள ரயில்வே தண்ட வாளத்தை கடக்கும்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலி யானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் இருப்பு பாதை காவல் துறை யினர் உதயகுமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த காவலர் உதயகுமாருக்கு பவானி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.