districts

img

சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ராணிப்பேட்டை,பிப்.6- ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப் பாக்கம் வழியாக பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சாலை விரி வாக்க பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் மேம்பாலம் கட்டும் பணிகளும் ஒரு சில இடத்தில் நடைபெற்ற வருவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை யில் முன்னாள் சென்ற கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் வரிசை கட்டி ஒரே இடத்தில் நின்றது.  காவேரிப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் இதனால் வாகனங்கள் சாலை யில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நின்றது. எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.